×

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் 3 வயது குழந்தை வெறி நாய் கடியால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். ஆனால், குழந்தையின் உடலில் அசைவு இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில் கேரளாவில் குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், வெறிநாய் கடிக்கான எந்த ஒரு தடயமும் இல்லை எனவும்,

மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டதில் குழந்தைக்கு எலிக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு, அதற்குண்டான சிகிச்சைமேற்கொண்டதன் காரணமாக, தற்போது குழந்தை நல்ல நிலையில் இருக்கிறது. இனியாவது, சுகாதாரத் துறை மந்திரி, அவரது துறையில் முழு கவனம் செலுத்தி, அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Chennai ,AIADMK ,General Secretary ,Asarippallam Government Hospital ,
× RELATED முத்திரைக்கட்டணம் உயர்வு அரசாணையை...